Social Icons

Pages

Tuesday, December 20, 2011

ஆதித் தமிழனின் ஆற்றுகையை அரங்கேற்றிய ஆடலரசு…..


ஒடுக்கப்படுகின்ற இனங்கள் எல்லாம் தமது விடுதலைக்கான அடையாளமாக தமது பாரம்பரிய கலைகளையே பயன்படுத்துகின்றனர். நாங்களும் தப்பு(பறை) இசையை விடுதலைக்கான ஆயுதமாகவே பார்க்கின்றோம் பேச்சால் சொல்ல முடியாததை பாட்டாலும் இசையாலும் உணர்ச்சியுடன் மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும். திரிபு வாதத்திற்க்கு ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்ட ஆயுதமாகவே நாம் இதனை பயன்படுத்துகின்றோம். நான் இந்தியன் என்று சொல்வதை விட ஒரு தமிழன் என்று என்னை அடையாளப்படுத்துவதற்க்கான ஆயுதமாகவே தப்பு (பறை) இசையை கருதுகின்றேன். குரல் விடுதலைக்கான ஆயுதம் என்கிறேன்…..இது யாழ்ப்பாண மண்ணில் கால்பதித்த போது ஆடலரசுவின் வார்த்தைகளில் இருந்து உதிர்ந்தவை.


ஆடலரசு என்கின்ற வேணு அவர்களை நான் முதன் முதலாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது இந்திய பயணம் தான். எமது பாரம்பரிய கலைகளை வளர்க்க வேண்டும் வெறியோடு இருக்கின்ற ஓர் துடிப்புள்ள இளைஞனை பார்த்து வியந்தேன். இதே துடிப்புள்ள இளைஞன் எங்கள் மண் ஈழத்தில் அதுவும் யாழ் மண்ணில் தடம் பதித்தது பெருமிதத்திற்கொரு விடையம். இன்றைய நவீன யுகம் எம் அனைவரையும் பரபரப்புக்கு ஆழ்த்தி விடுகின்ற சமயத்தில் எங்களின் பாரம்பரிய கலைகள் மருவி போகின்ற துர்பாக்கியம் நிலவுகின்ற நேரத்தில் இவரின் வருகையால் இந்த பாரம்பரிய கலைகள் புத்துருவாக்கம் பெறுகின்றது.


     


இவரைப்பற்றி குறிப்பிடுகின்ற போது சென்னையில் இருந்து நாற்பது கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்ற முறிச்சம்பேடு கிராமத்தை தனது பூர்வீகமாக கொண்டவர். சுட்டத்தரனி பட்ட படிப்பை முடித்து விட்டு தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ) இதழியல் கற்றுகொண்டு இருக்கின்றார். இவரின் எதிர்கால திட்டம் சட்ட துறையில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். “என்னையும் எனது தம்பி தங்கச்சியையும் படிப்பித்தவர் என்ர மாமா தான் எங்க கிராமத்தில நான் தான் முதலாவது பட்டதாரி….” என்று கூறும் ஆடலரசு ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் கலைக்குழு தலைவராக தற்போது பணியாற்றுகின்றார்.



                 

ஒடுக்கப்படுகின்ற இனத்தின் விடுதலைக்கான ஆயுதமாகவே கலையினை எப்போதும் பார்க்கவேண்டும். அப்போது தான் அந்த இனத்தினுடைய வலிமை இன்னும் அதிகரிக்கும் தொல்குடி தமிழர்களின் அடையாள சின்னமாக தப்பு இசை இருக்கின்றது அதனை அடையாளப்படுத்துவதற்க்கும் மீண்டும் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்க்கும் வேணு அவர்கள் அயராது உழைத்து வருகின்றார்.

                     

காலகட்டத்தில் எம் மூதாதரை பயன்படுத்திய மிகசிறந்த தொடர்பு சாதனம் சாதனம் தான் தப்பு என்று சொல்லப்படுகின்ற பறை வாத்தியம். சாதிக்கட்டமைப்பில் இருந்து பார்க்கின்ற போது தப்பு இசையை ஒரு தாழ்த்தப்பட்ட இசையாகவே இப்போதும் பார்க்கின்ற நிலைமை நம் சமூகத்தில் உள்ளது. பரதநாட்டியம் போன்றவற்றை உயர்வாக பார்க்கின்ற போது தப்பு இசையை தாழ்வாக பார்ப்பது, ஒடுக்கப்பட்டோர் தொடர்ந்து வறுமையில் வாடுவதும், சினிமாவின் ஊடாக நாட்டார் கலைகள் பற்றி கொடுக்கப்படுகின்ற பிழையான கருத்துக்களும் இந்த பாரம்பரிய கலைகளை மேலும் விரிவு படுத்துவதில் ஏற்படுகின்ற தடைக்கற்களாகும்.
அந்த வகையில் ஆடலரசு அவர்கள் இரண்டு கிழமைகள் யாழ்மண்ணில் தங்கி இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களுக்கும், செயற்திறன் அரங்க இயக்க மாணவர்களுக்கும் ஆதித்தமிழனின் பாரம்பரிய கலையினை பயிற்றுவித்தார். ஐந்து வகையான நடனங்களை பயிற்றுவித்து அரங்கேற்றினார். கும்மி ஆட்டம், தப்பாட்டம், சாட்டைகுச்சி ஆட்டம், ஆதிவாசி ஆட்டம், ஒயில் ஆட்டம். என்பனவாகும்.


இதோ அவர் ஆற்றுகை செய்த நடனங்கள் பற்றியதான ஓர் அறிமுகத்தை உங்களுக்கு தருகிறேன்

01
இதில் ஒயில் ஆட்டம் பற்றி இவர் கூறுகின்ற போது. துமிழக மக்களினுடைய பாரம்பரிய கோயில் நடனம் ஒயில் ஆட்டம் ஆகும் அந்தந்த ஊரை சார்ந்த மக்களின் மொழியின் அடிப்படையில் ஒயில் ஆட்டம் ஆடப்படுகின்றது. இது சாதாரணமாக விதை விதைத்தல் அல்லது தானியங்களை காய வைக்கின்ற போது காக்கை குருவிகள் அதனை கொத்தி திண்று விடுமோ என்ற அச்சத்தில் ஒரு மூதாட்டி தன்னுடைய கையில் ஒரு துணியினை எடுத்து அதில் ஒரு கல்லை வைத்து கட்டி சுழற்றி வீசுகின்ற போது அந்த கல் பறவை மீது பட்டு பறவை பறக்கும் இது இவர்கள் இந்த ஆயுதத்தை எடுத்ததற்;க்கு காரணம் சொல்லப்படுகின்றது. இதன் காரணத்தால் தான் ஒயில் ஆட்டம் இன்று சிறப்பை பெறுகின்றது. இதுவே ஒயிலாட்டத்தின் பின்புல கதை.


02
அடுத்து பறை ஆட்டம்(தப்பு) பற்றி இவர் பேசுகின்ற போது.கறுப்பின மக்கள் ஒடுக்கப்பட்ட போது பறை இசைத்தார்கள் என்று சொல்லப்படுகின்ற வரலாற்றுக்கதை அதே போல்த்தான் தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து மீள் உருவாக்கம் செய்யப்பட்டது தான் இந்த தப்பு இசைக்கலை. இன்று தமிழகம் முழுவதும் வடக்கு, கிழக்கு, தெற்க்கு, மேற்க்கு போன்ற பகுதிகளில் பல்வேறு பரிநாம வளர்ச்சியில் பேசப்படுகின்றது. குறிப்பாக தென்மாவட்டமான மதுரையில்
 இந்த பறையை “கொட்டு” என்று சொல்கிறார்கள். கொட்டு என்றால் அடித்தல் என்று பொருள்படும். அத்தோடு தஞ்சாவூர் மாவட்டத்pல் “தப்பு” என்று சொல்வார்கள். தப்பு என்றால் அடிக்கப்பட்டது என்று பொருள்படும். கோயம்புத்தூர் பகுதியில் இந்த பறை இசையை பெரிய நிலம் என்று சொல்வார்கள். சென்னையில் வாளும் மக்கள் இதனை மேளம் என்று அழைப்பார்கள்.

எல்லா பகுதிகளிலும் இந்த பறையாட்ட கலை என்பது ஒன்று தான். ஆனால் சொல்லாடல்களும், வழக்குமுறைகளும் மட்டுமே வேறுபட்டு நிக்கின்றன. மதுரையில் உள்ள ஆதிக்குடிகள் பறையினை அடித்து ஆடத்தெரிந்தவர்கள். தஞ்சாவூரில் உள்;ள மக்கள் தவிலை பயன்படுத்தி ஆடும் அதேவேளை பெண்களும் இந்த கலையினை ஆடக்கூடியவர்களாக இருக்கின்றனர். மதுரையில் உள்ள மக்கள் பெண்களை தவிர்த்தே இந்த பறையினை ஆடுவார்கள் ஏனென்றால் சாவுக்கும், கோயில் திருவுளாவிற்க்கும் இந்த பறையினை பயன்படுத்துவதே ஆகும். ஆனால் சென்னையை அண்டி வாழும் மக்கள் சற்று வித்தியாசமாக பறையோடு சேர்த்து ஒப்பாரி பாடலையும் பாடி ஆடுவார்கள்.



03
அடுத்து கும்மி ஆட்டம் பறையை தட்டி ஆடுவது மட்டுமல்ல இந்த ஆட்டம். இந்த ஆட்டத்தோடு கலையும், அறிவியலும், அரசியலும் கலந்திருக்கிறது. ஒரு குடும்பம்பத்தில் நல்ல நிகழ்வு நடக்கின்ற போது அந்த நல்ல  செய்தியினை தம் உறவினர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த கும்மி ஆட்டம் ஆடப்படுகின்றது. இதிலே அறிவியல் எப்படி தொடர்புபட்டிருக்கிறது என்றால் கைதட்டி ஆடும் போது உள்ளங்கையில் இருக்ககூடிய செல்கள் புத்துனர்சி பெறக்கூடிய வாய்ப்பை கும்மி ஆட்டம் கொடுத்திருக்கிறது.



04
அடுத்து ஆதி வாசிகள் நடனம் இது தென்னிந்தியாவின் மலையக பகுதிகளில் தான் ஆடப்படுகிறது. அதாவது கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி பகுதிகளில். இந்த நடனத்திற்க்கு குரும்பர் நடனம் என்ற மறு பெயரும் வழங்கப்படகிறது. ஏனென்றால் ஆதிவாசி இனத்தில் குரும்பர் இன பிரிவினரே இதனை அதிகமாக ஆடுவதனால் இதற்க்கான காரணப்பெயராக தோன்றியது. குரும்பர் இனத்தின் குலம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும் போது இந் நடனத்தினை ஆடும் வழக்கத்தினை இவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.


05
அடுத்து சாட்டைக்குச்சி ஆட்டம் இது தென்னிந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் வாடக்காய் மண்ணில் அதிகமாக ஆடப்படுகின்ற ஓர் கலை வடிவம்.

 இம் மண்ணில் விவசாயம் செய்யும்  மக்கள் தம்முடைய அலுப்பை களைப்பை போக்குவதற்க்காக ஆடப்பட்டு வருகின்ற ஓர் கலை வடிவமே இது. இந்த ஆட்டமானது மாடு கலைக்க பயன்படும் குச்சியினை பிரதானமாக கொண்டே இது ஆடப்படுகின்றது. அதாவது இக் குச்சியினை வைத்து சிறிய சண்டை போடுவார்கள் அவ்வேளை ஒருவர் இன்னொருவரை தாக்க மற்றவர் அதனை தடுக்க இவ்வாறு உருவானதே இந்த சாட்டைக்குச்சி ஆட்டம்.



ஆடலரசு என்கின்ற வேணுகோபால் தன் எண்ண உணர்வுகளை வெளிப்படுத்தகையில் யாழ் மண்ணில் நான் கொண்ட காதலின் பால் இம் மக்களை சந்திக்கவும் இம் மண்ணில் நான் எனது கலைகளை ஆற்றுகை செய்வதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன். ஒடுக்கப்பட்ட மக்கள் தமது பாரம்பரிய கலைகளை வைத்துக் கொண்டே தமது வாழ்வியலை இந்த உலகிற்கு காட்டியுள்ளார்கள். பூச்சியம் என்ற வடிவம் இல்லையென்றால் கணிதத்திற்க்கு இந்த சொல் அறிமுகமாகி இருக்காது. அது போலத்தான் இந்த பாரம்பரிய கலைகளும். என்னிடம் கலையினை பயின்ற் மாவர்களில் ஆயிரத்தின் துளிகளாக ஈழத்து யாழ் மண்ணின் மாவர்கள் இருப்பது பெருமிதம் தருகிறது…





இக் கலையினை பயின்ற மாவர்களின் எண்ணங்கள்………

பறையை மறையாகப்பார்க்கின்ற சமூகத்தில் இவ்வாற்றுகையானது ஒரு புதிய தேடலை தந்திருக்கின்றது. குறுகிய காலப்பகுதியில் நாம் கலந்து இவ்வாற்றுகை அரங்கேறியதென்பது “ஒரு எல்லையிலே நிற்கின்ற இராணுவ வீரனை விரட்டியடித்து அந்த இடத்தினை கைப்பற்றியபோது ஒரு போராளிக்கு இருக்கும் மகிழ்ச்சியை கொடுப்படுபோல் எனக்கும் இவ்வாறு மகிழ்ச்சியை தந்தது” என்கின்றார் இதனைப்பழகிய மாணவர் ஒருவா. ;இதைவிட மேலும் ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் ஒரு புதையலைக்கண்டு எடுக்கும் விவசாயியின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாம் பர்iவையாளரின் கைகளில் இருந்து வந்துபோன கரகோசத்தில் இருந்து இந்த மகிழ்கச்சியை நாம் பெற்றுக்கொணடோம் என்கின்றார் உற்சாகத்துடன்..



நீண்டகாலமாக வாழ்வியலோடு சம்மந்தப்பட்ட கிராமியக்கலை யாழ் மண்ணில் இல்லாமல் அழிந்து போயிடிச்சு இப்ப ஆடல் அரசு எங்கள்  யாழ்ப்பாணத்தில் இதனை பயிற்றிவித்து அரங்கேற்றியுள்ளார் என்கிறார் இன்னொரு மாணவி . இப்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறு நவீனத்தவங்கள் நிகழ்ந்து வருகின்ற வேளையிலே இந்தக்கலையை நாம் கற்று ஆடுவதென்பது மிகவும் சிறப்பான ஒன்றே. என்னதான் சினிமாவில் பல்வேறு ஆட்டங்கள் கூத்துக்களை பார்த்தாலும் நாம் பயின்ற இந்தக்கலையானது புனிதமானதாகவும் தமிழரின் பாரம்பரியத்தை எடுத்து விளக்குவதாகவும் அமைந்துள்ளது என்கின்றார்…..




ஆடலரசு என்கின்ற வேணுகோபால் தன் ஆற்றுகைகளை நிகழுத்துகின்ற ஒவ்வொரு சமயத்திலும் இந்த உலகத்திற்க்கு எம்மையெல்லாம் அறிமுகம் செய்த நடமாடும் தெய்வத்தை பற்றி பாடல் பாடுவது வழமை. அப்பாடல் மூலம் எல்லோரும் மெய்மறந்து லயித்து போய்விடுவார்கள்.

“ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்தை போல தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்ன பொத்த வேணும்.....”


                          ”  ஈரத்தில காயும் போது வானவில்லா தெரியும்
                           இத்து போன சேலையில் உன் சோக கதை புரியும்
                           கஞ்சி கொண்டு போகும் போது சும்மாடையா இருக்கும்
                           சேலை கட்டி இறைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்...”

அடுத்த பதிவின் உங்களோடு நான் இணைகின்றேன்............

2 comments:

ஷஹன்ஷா said...

உலகில் கலைகளை வளர்த்தெடுப்பது என்பது சிற்பியின் பணிக்கு ஒப்பான பணி.. நல்ல கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கலையை கற்றுக் கொடுத்து அவர்களினால் அக்கலை தொடர்ந்தும் வளர்க்கபடுவது என்பது அற்புதமான செயற்பாடு..

அதற்கான முதல் விதையை யாழ் மண்ணில் விதைத்து சென்றுள்ள வேணு அண்ணாவிற்கு எம் நன்றிகள்..
சட்டத்தரணியாக சாதிக்க வாழ்த்துகள்..

THUVARAA said...

சிறந்த பதிவு