இலங்கையில் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்தது. தற்போது போர் மேகங்கள் மறைந்து விட்டனவே தவிர, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இது தொடர்ந்தும் நகர்த்தப்படுகின்ற நாட்களாகவே இருந்து கொண்டு இருக்கின்றது. இது ஒரு புறம் இருக்க தமிழர்களுக்கு சாவும், கண்ணீரும், அகதிவாழ்வும் நாளாந்த நிகழ்வாக பதியப்பட்டு இருக்க, தமிழ் இனத்துக்காக ஆயுதம் தரித்த போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மூண்ட சண்டைகள், சமாதான பேச்சுக்கள், தீர்வுகள் எட்டப்படாது முடிந்த பேச்சுக்கள் யாவற்றையும் தமிழக ஊடகங்கள் எப்படி பார்த்தன? இப் பிரச்சனைகளை அவ் ஊடகங்கள் வெளிகொணர்ந்த விதம் எவ்வாறு என்பது பற்றி தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற முதன்மை சஞ்சிகையான “விகடன்” சஞ்சிகையின் செய்தியாளர் முரளிதரன் என்ற சொந்த பெயரினையுடைய தமிழ்க்கனல் அவர்கள் அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் சென்னையில் இடம்பெற்ற புத்தாக்க பயிற்சியின் போது பகிர்ந்து கொண்ட விடயங்கள் இவை.
எப்போதுமே ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பாக விகடன் சஞ்சிகை நடுநிலையாகவும் வெளிப்படையாகவுமே செய்திகளை தெரிவித்து வந்தது தெரிவித்துக்கொண்டு இருக்கின்றது. அத்தோடு விகடனில் “வீழ்ந்து விடுவேனோ என நினைத்தாய்” என்ற தொடர் தற்போதும் வெளிவந்தவண்ணமுள்ளது. பொதுவாகவே இலங்கையில் உள்ள மலையக தமிழர்கள் பற்றி இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட மறந்து விட்டன என்றே கூறலாம். ஆனாலும் 1980 காலப்பகுதியில் இந்த மலையக மக்களின் பிரச்சனைகள், சவால்கள், தோட்டபுறங்களில் அவர்களுக்கு நேர்ந்த துன்பங்கள் என்பன பற்றிய செய்திகளை வெளியிடுவதில் இக்கால பகுதியில் ஒரு காத்திரமான பங்கை இவ் ஊடகங்கள் வகித்தன.
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திய ஈழத்து
இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி அவர்களின் போராட்டங்களையும் வளரசெய்தது. ஆரம்ப காலங்களில் குறிப்பாக 1980 காலப்பகுதியில் தமிழக அரசிடம் இருந்து இந்த உபசரிப்பு கிடைத்தது. 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய இராணுவம் அமைதி படையாக அனுப்பிவைக்கப்பட்டபோது யாழ் மண்ணுக்கு இந்திய இராணுவம் வந்ததை “~கிண்டு பிறிண்டன்” என்ற பத்திரிகை சொன்னது போராளிக்குழுக்களுக்கு இடையில் போட்டி உள்ளதாக என்று தங்களின் கருத்தாக அப்பத்திரிகை செய்தியினை வெளியிட்டது.
இதே வேளை இக்கால பகுதிகளில் “துக்கலம்” வார இதழ் ஈழத்து போராளிகளுக்கு எதிராக செய்திகளை எழுத தொடங்கியது ஆனாலும் தமிழகத்தில் இருந்து வெளிவரும் முதன்மை நாளிதழ்களில் ஒன்றான தினமணி ஈழப்போராட்டத்திற்க்கும் போராட்ட குழுக்களுக்கும் ஆதரவாக செய்திகளை வெளியிட தொடங்கியது. ஆனாலும் “தினதந்தி” நாளிதழ் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு இருக்கின்றது என்று கூறமுடியாது.
இதெல்லாம் இவ்வாறு இருக்க இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி தற்கொலை குண்டு தாரிகளால் கொலைசெய்யப்பட்ட போது ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்காக வந்த ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட சம்பவங்களும் பத்திரிகைகளில் நடந்தேறியுள்ளன. இக்கால பகுதியில் இந்தியாவில் இயங்கி வந்த வானொலிகள் யாவும் அரச கட்டுப்பாட்டின் கீழே இயங்கி வந்தது. அந்த வகையில் அகில இந்திய வானொலி, ஆகாச வாணி என்பன இலங்கையில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் எதிர்மறை நோக்குடன் உடனுக்குடன் சொல்லி வந்தது. இதனோடு இணைந்த இந்த காலப்பகுதியில் நாளிதழ்களும், வாரஇதழ்களும் தனியே விமர்சனங்களையே தாங்கி வந்தன.
அத்தோடு இலங்கையில் சமாதானம் தோண்றும் வரைக்கும் இலங்கை விவகாரம் தமிழ்நாட்டில் எதிரானதாகவே பார்க்கப்பட்டது. இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள், விடயங்கள் விளம்பர நோக்கமாகவே வெளியிடப்பட்டன. அத்தோடு 2007 இல் ஈழத்தமிழர் பற்றி பேசவேண்டும் என்ற கருத்துநிலை உருவாக்கப்பட்டது. இதற்க்கு மக்கள் தொலைக்காட்சி மாத்திரமே உறுதுணையாக இருந்தது.
மேலும் அவர் தெரிவிக்கும் போது தமிழக ஊடகங்கள் ஏஜென்சிகள் மூலமே இலங்கை பிரச்சினை தொடர்பான பெற்று கொண்டன.
இதே போன்ற பல அனுபவ பகிர்வுகள் என் இந்திய பயணத்தில் உள்ளன அனை நான் அடுத்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்