Social Icons

Pages

Friday, November 25, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே!!


 “ இந்த எலக்சன் ரைம்ல கூட இந்த குப்பைக்கு மேல வந்து நிண்டு தான் ஓட்டு கேட்டாங்க….” இது லாக் ஏரியாவில் வசிக்கும் மக்களினுடைய வெறுப்போடு வந்த வார்த்தைகள் இவை.
                  சேரிப்புற மக்களிளுடைய வாழ்க்கை முறை துன்பகரமானது. இந்த நிலம் தான் எமக்கு வேன்டும் இதே நிலத்தில் தான் எங்களுக்கான வளங்கள் இருக்கிறது என்று எண்ணிக்கொள்பவர்கள் இந்த “லாக் ஏரியா” மக்கள்.
               


  
தெருவெங்கும் அமைந்திருக்கும் வீடுகள், மரங்களுக்கு கீழான சமையல், அதற்கு பக்கத்திலேயே ஆடு, மாடு கட்டி வளர்க்கப்படுகின்றது. இந்த வாழ்க்கை முறை இவர்களுக்கு திருப்திகரமாக இருக்கின்றதோ தெரியவில்லை. ஆனாலும் அது பார்ப்பவர்களின் சிந்தனையை பல கோணங்களில் தூண்டி விடுகின்றது.
                  
 இந்த “லாக் கேரிய” மக்களுக்கு அரசாங்கம் ஆற்றுக்கு பக்கத்தில் சின்ன கொட்டகை வீட்டில் இருந்த சமயம் அரசாங்கம் அந்த மக்களுக்கு முப்பது அடி அடுக்கு மாn குடியிருப்பினை அமைத்துக் கொடுத்தது. அந்த குடியிருப்பினுள் வாளும் மக்கள் மிக நெருக்கமாக இருந்து தங்களுடைய வாழ்க்கையினை நகர்த்துகின்றனர். கூடவே பிரச்சினைகளுக்கு மத்தியில்.
                    இரண்டு அடுக்கு மாடி கட்டிடத்துக்கு நடுவே தான் இந்த மக்கள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு அற்ற நிலையில் இவ்வாறு செயற்படுகின்றார்களோ? என்ற எண்ணம் தோண்றுகின்றது. ஏன் எனில் மேல் வீட்டில் இருப்பவர்கள் தங்களினுடைய வீட்டு கழிவுகளை கீழே ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தாமல் மேலே இருந்தவாறே குப்பைகளை கீழே வீசுகின்றனர். வீசப்படும் கழிவுகள் கீழே கழிவு நீருக்குள் கலக்கின்றது. இத் தேக்கத்தால் ஏற்படும் நாற்றம் இவை அனைத்தும் சாதாரண ஒருவரால் ஜீரணிக்க முடியாததொன்றே. ஆனாலும் அங்கு இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களும் வசதி வாய்ப்புடன் வாழ்கின்றனர். ஓவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி, குளிரூட்டி, மோட்டார்சைக்கிள், மடிக்கணனி, குளிரூட்டப்பட்ட சிறிய அறை என அவர்களின் வாழ்க்கை முறை நவீயமயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகமாக சம்பாதிக்கின்றவர்களாக உள்ளனரே என்று எண்ண தோண்றுகின்றது.
                   அங்கு இருக்கும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்ற பாடசாலை சில காலங்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. காரணம் அந்த குடும்பத்தில் இருக்கின்றவர்களுக்காகவே தான் அது ஆரம்பிக்கப்பட்டது அங்கு படிக்கின்ற பிள்ளைகளில் சிலர் பள்ளி நேரத்தில் பாதியிலே வீட்டுக்கு சென்று விடுவார்களாம். இதகால் தான் இந்த தொடக்கப்பள்ளி மூடப்பட்டது என்பது நேரில் சென்று விசாரித்தபோது தெரியவந்தது.
                    அத்தோடு இந்த லாக் ஏரியாவில் கழிவு நீரும் ஒழுங்காக அகற்றப்படாத தன்மையே காணப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டுக்கழவுகளும் அருகிலே ஓடும் “கூவ” நதியுடன் தான் கலக்கின்றது.
                     ஒட்டு மொத்தத்தில் இந்த மக்கள் வசதிவாய்ப்போடு வாழ்ந்தாலும் தங்களுக்கு ஏற்படும் இவ் சுகாதார பிரச்சினையைத் தீர்த்து கொள்ளாதவர்களாக உள்ளனர். இதற்க்கு இவர்களே ஒரு காரணமாக இருக்கின்றார்கள் என்பது வேதனையே!



 இது எனது இந்திய பயணம் தந்த முதல் அனுபவம்…இன்னும் பல அனுபவங்களோடு அடுத்த பதிவில் இணைகின்றேன்………

No comments: