கால்டசின் தங்கையரை கரையேற்றி களைப்பாறி
கடைக்குட்டி தம்பியைக் கல்வியில் முன்னேற்றி
ஈன்றாரின் நோயோடு இழுபட்டு பணி செய்து
நாரிநிமிர்த்தி நாற்பது வயதான பின்பு
சாதகத்தை தரகரிடம் சமர்ப்பித்துக் காத்திருக்டிக
சாத்திரம் சரியாக கோத்திரம் குறுக்கிழுக்க
கோத்திரம் பொருந்திவர சாத்திரம் சறுக்கிநிற்க
மேலும் இருவருடம் வீணாய்க் கழிந்ததுவே!
ஓடுமீன் ஓடி உறுமீனைக் காத்திருக்க
தாடிமயிர் வெளுத்து தலைமண்டை வெளியாச்சு
வாடிய என் வாழ்வை மலர்விக்க இனியொருத்தி
நாடி வருவாளா நான் செய்த பாவம் என்ன?
பெண்களோடு சோதரனாய் பிறந்த குற்றம்
பெற்றாரைத் தெய்வமென மதித்த குற்றம்
பிறப்போடு கிரகங்கள் பகைத்த குற்றம்
புரையோடி கெடுக்கின்ற சமூகக் குற்றம்
இத்தனையும் சோ்ந்ததென்னை தரிசித்த
எம் பாவம் பேசுதற்க்கோ எவருமில்லை
பெண்பாவம் பேசுகின்ற எழுதுகின்ற
பெரியீரே எமக்கும் இருவரி ஒதுக்கும்!
கடைக்குட்டி தம்பியைக் கல்வியில் முன்னேற்றி
ஈன்றாரின் நோயோடு இழுபட்டு பணி செய்து
நாரிநிமிர்த்தி நாற்பது வயதான பின்பு
சாதகத்தை தரகரிடம் சமர்ப்பித்துக் காத்திருக்டிக
சாத்திரம் சரியாக கோத்திரம் குறுக்கிழுக்க
கோத்திரம் பொருந்திவர சாத்திரம் சறுக்கிநிற்க
மேலும் இருவருடம் வீணாய்க் கழிந்ததுவே!
ஓடுமீன் ஓடி உறுமீனைக் காத்திருக்க
தாடிமயிர் வெளுத்து தலைமண்டை வெளியாச்சு
வாடிய என் வாழ்வை மலர்விக்க இனியொருத்தி
நாடி வருவாளா நான் செய்த பாவம் என்ன?
பெண்களோடு சோதரனாய் பிறந்த குற்றம்
பெற்றாரைத் தெய்வமென மதித்த குற்றம்
பிறப்போடு கிரகங்கள் பகைத்த குற்றம்
புரையோடி கெடுக்கின்ற சமூகக் குற்றம்
இத்தனையும் சோ்ந்ததென்னை தரிசித்த
எம் பாவம் பேசுதற்க்கோ எவருமில்லை
பெண்பாவம் பேசுகின்ற எழுதுகின்ற
பெரியீரே எமக்கும் இருவரி ஒதுக்கும்!

No comments:
Post a Comment